4.சிலைகள் உடைப்பு.
பெரியார் சிலை உடைப்புக்கு பதிலாக சாமி சிலைகளை உடைச்சாங்க. இது சரியா தப்பான்னு பேச நான் வரலை.இதற்கு பதிலடியாக சக மனிதர்கள் மேல் ஏன் பெட்ரோல் குண்டு வீசினார்கள்?. ஏன் வெட்டினார்கள்?.
இங்குதான் இருக்கு மனித மனதின் சூட்சுமம்.
ஒரு மனிதனின் நாகரீகம், அந்த மனிதன் கைக்கொள்ளும் வன்முறையின் அளவை பொறுத்துதான் அளவிடப்பட வேண்டும். என்ன? வன்முறைக்கு அளவா?. வன்முறையே கூடாது, என்று நினைப்பவர்களா நீங்கள்?. அப்படி ஒரு மனிதன் உங்களுக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான்.
ஏனென்றால் வன்முறையும் மனிதனின் இயல்பு குணங்களில் ஒன்றுதான். அதோட அளவை பொறுத்துதான், மனிதன் தீவிரவாதியா அல்லது சாதுவான்னு தெரிஞ்சிக்க முடியும்.
நிறைய சாதுக்களை கொண்ட சமூகம், நாகரீக சமூகம் அதற்கு எதிர்பதம் அநாகரீக சமூகம். இந்த சிலை இடிப்பு விஷயத்தில் ரெண்டு தரப்புமே அநாகரீகமா நடந்திருந்தாலும், எனது கண்டனம் பெரிய அளவில் வன்முறையை கைக்கொண்ட திராவிடர் கழகத்தினர் மீதுதான்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

0 Comments:
Post a Comment
<< Home