மனிதன்

உலகமெனும் ஏட்டில் எனக்கான பக்கம்.

Monday, December 11, 2006

5.ஜன்னு கதைகள்.

ஐயாமாரே! அம்மாமாரே! குழந்த மனம் கொண்ட மஹாஜனங்களே! தலைக்காய் முத்திப்போனவங்கள்ளாம்
ஜென் கதை பேசுவத கேட்டுருப்பீங்க. அத நினைச்சு இத படிக்காதிங்க. இது ஜன்னு கதைங்க. ஜன்னு கத சொல்லும் முன்பு, நம்ம ஹீரோ ஜன்னு பத்தி ஒரு அறிமுக உரைங்க.

இந்த ஹீரோவுக்கு, இப்ப வயசு ஆறு நடந்துகிட்டு இருக்குதுங்க. இவரோட ஒன்றரை வயசுலேந்து, இவரை தூங்க பன்ன, நான் அள்ளி வுட்ட கதைங்கதான் ஜன்னு கதை. இவரு வேற யாரும் இல்லைங்க, என்னோட சீமந்தப் புத்திரன்தான். கதைக்கு நடுவுல நிறைய பாடல் வருங்க. ஆனா எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாதுங்க.

கதையில வரும் எல்லா பாத்திரங்களும், பெரிய இசை ஞானிங்க ஆனால் சங்கீதம் எதுவும் படிச்சதில்ல. இதில் வரும் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை; வேனும்னு நினச்சா;வானமே எல்லை.

ஹீரோன்னா நண்பர்கள் இல்லாமலா?. நம்ம ஜன்னுவோட நண்பர்களா இப்போதைக்கு இருப்பவர்கள்.
1.நரசிம்மா லயன். 2.மீனாட்ச்சி பேரட்.3.நாகராஜ் பாம்பு.
4.கணேஷா ஆன. 5.கிட்டன் மியாவ். 6.பைரவ் டாக்.
7.முருகா மயில். 8.ரப்பர் ball.

இந்த நண்பர்கள் அத்தனபேரும், எப்பவும் நம்ம ஜன்னுவ சுத்தித்தான் இருப்பாங்க. சாப்புடரது, தூங்கரது, குளிக்கரது,
படிக்கரது, பாடரதுன்னு ஒரு கோஷ்டியாத்தான் சுத்திகிட்டுத் திரிவாங்க.

இப்போதைக்கு அறிமுகம் இவ்ளோதான். அடுத்து கதைக்கு போவோம். டன்டனக்கா......டன்....டனக்குனக்கா....டின்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home